Featured
Featuredஅரசியல்தமிழகம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் அளித்தார்

TVK Vijay Karur Stampede victims Meet LIVE Updates: கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நேரில் சந்திக்கிறார்.

கரூர் வல்வெச்சாமிப்புரத்தில் கடந்த 27-ம் தேதி நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் தவெக தலைவர் விஜய் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவர்களிடம், எதிர்கால மருத்துவ செலவுகள், கல்வி உதவி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மென்மையாக மாற்றுவதாக உறுதியளித்தார்.

முதலில், அந்தக் குடும்பங்களை நேரில் சந்திப்பது தொடர்பாக காவல்துறையின் அனுமதி பெற்றதில்லை என்று தவெக தரப்பு தெரிவித்தது. எனினும், அவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் நேரில் சந்தித்து ஆறுதலுடன் வாக்குறதி அளித்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், விஜய் அவர்கள் அனைவருக்கும் தேவையான உதவி செய்வதாக உறுதி அளித்தார்.


What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *