கொல்கத்தா: இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனாவுக்கு ஏற்பட்ட காயம், ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
₹18 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 23 வயதான இவர், 2026 டி20 உலகக்கோப்பையின்போது காயமடைந்தார். உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்று, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற்ற பின், ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 28 அன்று ஐபிஎல் தொடங்கியும், கொல்கத்தா அணி இன்னும் வெற்றியைப் பதிவு செய்யவில்லை. விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்த கொல்கத்தா, மழை காரணமாகக் கைவிடப்பட்ட ஒரு போட்டியால் ஒரு புள்ளி பெற்று புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. அணியின் வேகப்பந்துவீச்சுத் துறை, தற்போது முக்கிய வீரர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னடைவுக்கு மத்தியில் பத்திரனாவின் வருகை அணிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சுத் துறை பலவீனமடைந்துள்ளது. பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். ஹர்ஷித் ரானா காயத்தால் விலகியதால், நவ்தீப் சைனி அவருக்கு மாற்றாகச் சேர்க்கப்பட்டார்.
அகஷ் தீப் இல்லாததால், சௌரப் துபே மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாததால், அணிக்கு பதிரனாவின் வருகை மிக முக்கியமானதாக அமைகிறது.காயத்தில் இருந்து மீண்டு வரும் பதிரனா, வலைப்பயிற்சியில் பந்துவீசத் தொடங்கிவிட்டார். 23 வயதான இவர் அடுத்த வாரம் உடற்தகுதி தேர்வை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கும்.
இது முடிந்தவுடன், ஏப்ரல் நடுப்பகுதியில் அவர் கொல்கத்தா அணியுடன் இணைவார் என உறுதியாகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 32 ஐபிஎல் போட்டிகளில் 8.68 சிக்கன விகிதத்தில் 47 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள பதிரனா, டெத் ஓவர்களுக்கான தனது சிறப்பை நிரூபித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான தனது அடுத்த ஹோம் போட்டியில் இருந்து கொல்கத்தா அணிக்கு இவர் ஒரு பெரும் பலமாக அமைவார்.






























