சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.சென்னை அண்ணா அறிவாயலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்து இருந்தார். இந்த 5 பேர் கொண்ட குழுவினர், தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டி போட்டியிட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.






























