Featured
Featuredசெய்திகள்தமிழகம்மற்றவை

விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. 10 நாட்களுக்கு பிறகு உடல் ஒப்படைப்பு- கதறிய பெற்றோர்!

விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வேடன் நத்தம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், பிறந்த மார்ச் 10 ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது இது எங்கள் எல்லைக்கு உட்பட்டது கிடையாது என்று கூறி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அலைகழிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மாணவி காணாமல் போன 24 மணி நேரத்தில்,கடந் த 11 ஆம் தேதி குளத்தூர் காட்டுப்பகுதியில் இருந்து ஆடைகள் கிழிந் த நிலையில், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் மாணவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த செய்திகள் வெளியான நிலையில், உறவினர்கள் குற்றவாளியை கைதுச் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்பிறகு, இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து குளத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும்,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், 10 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகள் ஒன்று விடாமல் சுமார் 50 பேரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர். ஒருபுறம் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரை பிடித்து டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் வேடநத்தம் காட்டு பகுதியில் அமைந்துள்ள காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 500 கிலோ மீட்டர் தூரத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றது தெரியவந்தது. பின்னர் இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, அது ராமநாதபுரத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவருடைய திருடப்பட்ட வாகனம் என்பது தெரிய வந்தது.

மர்ம நபர் ஓட்டி வந்து இரு சக்கர வாகனத்தை சென்று வந்த இடங்களை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணையை தீவிர படுத்தி அந்த நபரை கைது செய்தனர். அவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பது தெரியவந்தது அவருக்கு வயது 30. ஏற்கனவே 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிய வந்துள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடலில் இருந்த நகைக்கிரல்களின் சதைகளின் மாதிரிகள் தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்து போனதை தொடர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

மாணவியை கொலை செய்ததற்கான காரணம் என்ன எப்படி கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறை என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளப்பட்ட வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டது எடுத்து உறவினர்கள் மாணவியன் உடலை பெற்றுக் கொண்டனர். கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என ஒன்பது நாட்களாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *